உங்கள கையெடுத்து கும்புடுறேன்... கோவை பிரஸ் மீட்டில் கெஞ்சிய ரஞ்சித்...!

published 6 months ago

உங்கள கையெடுத்து கும்புடுறேன்... கோவை பிரஸ் மீட்டில் கெஞ்சிய ரஞ்சித்...!

கோவை: என் மீது வன்மத்தை தவிர்த்துவிடுங்கள் என்றும் நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல என்றும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

கோவையில் நடிகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என்னைப்பற்றி வலைதளங்களில் திரித்து கூறப்படுகிறது. ஆணவ கொலைக்கு ஆதரவானவன் நான் அல்ல.

கவுண்டம்பாளையம் படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் இருந்தும் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் தோல்வியடையவில்லை. இப்படத்தை பார்த்த மக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்கள் வெற்றி.

இன்னும் அதிக திரைகள் கிடைக்கும் என நம்புகிறேன். கூடிய விரைவில் இந்த படம் OTTயில் வெளியாகும். OTTயில் வெளியிடுவதிலும் சர்ச்சை வந்தால், வீடு வீடாக வீடியோ கேசெட் தருவோம். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe