4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்...

published 6 months ago

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்...

கோவை: கோவை சுந்தராபுரத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெறும் ஊழல்,FL2 மதுபான கடையை அகற்றக் கோரி, போத்தனூர் சுந்தராபுரம் சாலை சீரமைக்க கோரி,குறிச்சி மயானத்தை சீரமைக்க கோரி
உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன்:

விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் சாலைகள் சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.வெள்ளலூர் குப்பை கடையில் தீப்பிடித்து எறிந்தால் அது அணைப்பதற்கு மக்கள் வரி பணத்தை பல லட்சக்கணக்கில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள்.

திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கக்கூடிய சொர்க்கமாக அந்த குப்பை கிடங்கு அமைந்துள்ளது அதை வைத்து அவர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தால் மது கடைகளை மூடுவோம் என்று கூறி இருந்த நிலையில் தற்பொழுது வீதிக்கு வீதி FL-2 பார்களை திறந்து வருகிறார்கள்.ஒவ்வொரு FL-2 பார்களுக்கு 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்களுக்கு அனுமதி வருகிறார்கள்.

மேலும் கோவில் திருவிழாக்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி கொடுக்கிறார்கள் ஆனால் பார்களுக்கு மட்டும் நள்ளிரவு 12 மணி வரை அனுமதி கொடுக்கிறார்கள்.சுடுகாட்டுக்குள் சென்றால் உள்ளே பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் உள்ளே சென்று இனங்களை அடக்கம் செய்யாத சூழல் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe