ரேஷன் கடைக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு!

published 6 months ago

ரேஷன் கடைக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு!

கோவை: ரேஷன் கடைக்குள் புகுந்த நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதால் ஊழியர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் வால்பாறையில் நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து வெள்ளமலை எஸ்டேட் மட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று காலை வழக்கம் போல் ரேஷன் கடையைத் திறக்க விற்பனையாளர் சென்றார். கடை கதவைத் திறந்து போது உள்ளே 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புப்படை வீரர்கள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe