மேற்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 350 கிலோ கஞ்சா கோவையில் வைத்து அழிப்பு...

published 6 months ago

மேற்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 350 கிலோ கஞ்சா கோவையில் வைத்து அழிப்பு...

கோவை: 10  மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா கோவையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது.


கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல்  கஞ்சா, குட்கா ஆகியவை கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலிசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மொத்த  கும்பலையும் கைது செய்துள்ளனர்.

இதில்  போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் உள்ள கஞ்சாவை  தனியார் தொழிற்சாலையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் எரித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe