கோவையில் இ-சேவை மையம், வீட்டில் புகுந்து திருட்டு சிசிடிவி-யை கைப்பற்றி விசாரணை…

published 6 months ago

கோவையில் இ-சேவை மையம், வீட்டில் புகுந்து திருட்டு சிசிடிவி-யை கைப்பற்றி விசாரணை…

கோவை: கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பங்கஜம்(62). இவர் அப்பகுதியில் இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

இதனை பங்கஜத்தின் மகன் கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று காலை ஊழியர் பிரதாப் என்பவர் இ- சேவை மையத்தை திறக்க வந்தார். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 

உள்ளே சென்று பார்த்த போது, கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள், ரூ. 15 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-சேவை மையத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார்கள்.
 

அதே போல் கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியை சேர்ந்தவர் அனிதா(34). இவர் நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டாமல் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நைசாக நுழைந்த மர்ம ஆசாமி அங்கிருந்த செல்போன் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe