கோவையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் காலில் மாவுக்கட்டு!

published 6 months ago

கோவையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் காலில் மாவுக்கட்டு!

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில்பாளையத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மொத்தம் ஒன்பது பேர் ஈடுபட்டதாக தெரியவந்தது.

 

இதனை அடுத்து கோவில்பாளையம் போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆறு பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்இந்த வழக்கில் தொடர்புடைய ரவீந்திரன், நந்தகுமார், சிராஜுதீன் ஆகிய மூன்று பேர் மட்டும் போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து சிம்லாவுக்கு தப்பி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து கோவில்பாளையம் தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து சிம்லா வரை சென்று அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து கோவில்பாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரவீந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக  கூறியதால் அதனை எடுப்பதற்காக போலீசார் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளனர். அதில் அவர்கள் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய கோவில்பாளையம் போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்தனர். மற்றொருவரை சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe