கோவையில் தியேட்டர் மாடியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி!

published 6 months ago

கோவையில் தியேட்டர் மாடியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி!

கோவை: தியேட்டர் மாடியில் தூங்கிய கன்னியாகுமரியை சேர்ந்த தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தியேட்டர் உள்ளது. இங்கு புனரமைக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சில கட்டிட தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு வேலை பார்த்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் சாணிவிளையை சேர்ந்த விஜின் (38), சக தொழிலாளர்களுடன் மது அருந்தினார்.

பின்னர் சாப்பிட்டு விட்டு தியேட்டரின் மொட்டை மாடியில் தூங்க சென்றார். அங்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தூக்கத்தில் அவர் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவைக்கான செய்திகள், அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாடியில் தூங்கிய வாலிபர் தவறிவிழுந்து இறந்த சம்பவம் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe