கோவையில் 800 போதை மாத்திரை பறிமுதல்- 4 பேர் கைது…

published 5 months ago

கோவையில் 800 போதை மாத்திரை பறிமுதல்- 4 பேர் கைது…

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது வடகோவை கூட்ஷெட் ரோட்டில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 800 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ராஜவீதியில் உள்ள ஒரு கார் பார்க்கிங்கில் சந்தேகம்படும் படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். சோதனைசெய்தபோது, அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்த அக்பர் அலி(24), அஸ்லாம்(25), குறிச்சி பிரிவை சேர்ந்த அப்துல் நாசர்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 1.150 கி.கிராம் கஞ்சா மற்றும் 3 செல்போன்கள், ஒரு ஆட்டோ, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe