பாலிஷ் செய்ய கொடுத்த தங்கத்துடன் ஊழியர் மாயம்...

published 5 months ago

பாலிஷ் செய்ய கொடுத்த தங்கத்துடன் ஊழியர் மாயம்...

கோவை; கோவையில் பாலிஷ் செய்ய கொடுத்த ரூ.15 லட்சம் தங்கத்துடன் ஊழியர் மாயமானார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் லெனின் தாஸ் (37). இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். அதன் அருகில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மிட்டா என்பவர் தங்க நகை பாலீஸ் செய்யும் கடை நடத்தி வந்தார். அங்கு லெனின் தாஸ் அடிக்கடி தங்க நகையை கொடுத்து பாலீஸ் செய்வது வழக்கம். 

இதேபோல், கடந்த 20ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்புள்ள 264 கிராம் எடையுடைய 114 ஜிமிக்கி கம்மல்களை பாலீஸ் செய்வதற்காக மிட்டாவிடம் கொடுத்தார். இந்நிலையில், லெனின் தாஸ் நேற்று அவரது கடைக்கு பாலீஸ் செய்ய கொடுத்த நகைகளை வாங்குவதற்காக சென்றார். அங்கு அவர் இல்லை. 

கடையில் இருந்த அவரது சகோதரரிடம் கேட்டபோது, ஜிமிக்கி கம்மலுடன் வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த லெனின் தாஸ் அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. அவர் தங்க நகைகளுடன் தனது சொந்த மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என தெரிகிறது.
 

இதுகுறித்து லெனின் தாஸ் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து, வெளி மாநிலத்திற்கு தங்க கம்மலுடன் தப்பி ஓடிய மிட்டாவை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe