தடாகம் பகுதியில் மக்காச்சோள பயிரை சூறையாடி மதில் சுவரை உடைத்த காட்டுயானை…

published 5 months ago

தடாகம் பகுதியில் மக்காச்சோள பயிரை சூறையாடி மதில் சுவரை உடைத்த காட்டுயானை…

கோவை: கோவை தடாகம், தொண்டாமுத்தூர், ஆலந்துறை சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாயத் தோட்டத்திற்குள் உலா வருகிறது. 

இந்நிலையில் தடாகம் தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஆனைகட்டி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் பயிர்களை தின்று சேதப்படுத்தி, சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மதில் சுவரை உடைத்து விட்டு ஒற்றைக் காட்டு யானை சென்றது. உள்ளே இருந்த பயிர்களை உண்ட நிலையில் மீண்டும் மறுபக்கம் இருந்த மதில் சுவரை உடைத்து விட்டு வனப் பகுதிக்குள் சென்றது. 

காட்டு யானை இரவு நேரங்களில் தொடர்ந்து  உலா வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe