கோவையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மீது வழக்குப்பதிவு…

published 5 months ago

கோவையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மீது வழக்குப்பதிவு…

கோவை: கோவையில் கூட்டம் கூட்டியதாக பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை ரயில் நிலையம் அருகே ‘போச்சே புட் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வியாழக்கிழமை பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. 6 பிளேட் சாப்பிட்டால் ரூ. 1 லட்சம், 4 பிளேட் சாப்பிட்டால் ரூ. 50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ. 25 ஆயிரம் என பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பிரியாணி பிரியர்களும் வந்திருந்தனர். 

மதியம் துவங்கிய போட்டி நள்ளிரவு வரை நீடித்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் போட்டி என்பதால் ஒரு பிளேட் பிரியாணி அளவு அதிகமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்திருந்தனர். போட்டில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் குவிந்ததாலும், வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதாலும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓட்டல் மேலாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe