பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் டாக்சி டிரைவர்...

published 5 months ago

பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் டாக்சி டிரைவர்...

கோவை: கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

பஸ் ரயில் நிலையம் அருகே வந்த போது, அந்த பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி அதிகரித்தது. இதனைக்கண்ட கண்டக்டர் பஸ்சை அரசு மருத்துவமனைக்கு ஓட்டி செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். மருத்துவமனை முன் பஸ் நின்றதும் அந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல சிலர் உதவி கேட்டனர். 

இதனைக்கண்ட பெண் டாக்சி டிரைவர் ரமாதேவி என்பவர் தாமாக முன் வந்து அந்த பெண்ணை காரில் ஏற்றி மருத்துவமனைக்குள் அழைத்து சென்று பிரசவ வார்டில் சேர்த்தார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இது குறித்து ரமாதேவி கூறுகையில், ‘‘தேனி எனது சொந்த ஊர். அங்கிருந்து கோவை வந்து டாக்சி ஓட்டி வருகிறேன். அரசு மருத்துவமனை முன்பு வாடிக்கையாளர் ஒருவரை இறக்கி விட்டு நின்றிருந்தேன். அப்போது பஸ்சில் கர்ப்பிணி வலியால் துடித்ததை கண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்‘‘. என்றார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe