அரிவாளை காட்டி நகை பறித்த இருவர் கைது…

published 5 months ago

அரிவாளை காட்டி நகை பறித்த இருவர் கைது…

கோவை: கோவை குளத்துப்பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று குளத்துப்பாளையத்தில் நின்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி முனீஸ்வரன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த முனீஸ்வரன் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், செயின் பறித்தது குனியமுத்தூர் பிகே புதூர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த அப்துல் ரபீக்(22), தாராபுரம் மூலனூரை சேர்ந்த தாமோதரன்(23) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe