கோவையில் கோர விபத்து; அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார்!

published 5 months ago

கோவையில் கோர விபத்து; அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார்!

கோவை: கோவை பொள்ளாச்சி சாலையில் முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் இன்று காலை கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாகச் சொகுசு கார் ஒன்று சென்றது.

இந்த கார் கிணத்துக்கடவை அடுத்த தாமரைக்குளம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து, முன்னே சென்று கொண்டிருந்த பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe