2 மாசத்துக்கு அப்புறம்... திறந்தாச்சு நம்ம ஊரு குற்றாலம்...

published 5 months ago

2 மாசத்துக்கு அப்புறம்... திறந்தாச்சு நம்ம ஊரு குற்றாலம்...

கோவை: கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தளமாக விளங்குகிறது கோவை குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது வனத்துறை தடை விதிக்கிறது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

இதனிடையே அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கோவை மக்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் அருவியை காண இங்கே க்ளிகே செய்யுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe