கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

published 2 weeks ago

கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ செயலியை உடனடியாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்தாருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ESI திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe