பக்கத்து வீட்டுக்காரர் மோட்டார் சைக்கிளில் தீ வைத்த வாலிபர் கைது…

published 1 week ago

பக்கத்து வீட்டுக்காரர் மோட்டார் சைக்கிளில் தீ வைத்த வாலிபர் கைது…

கோவை: கோவை அருகே உள்ள ரத்தினபுரி லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஆம்ப்ரோஸ் (வயது 58). இவரது வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எறிந்தது. 
இதை அந்த வழியாக வந்து சென்ற ஒரு காவல் படை வீரர் சுனில் என்பவர் பார்த்து தகவல் தெரிவித்தார். 
உடனடியாக ஆம்ப்ரோஸ் விட்டனர் எழுந்து தீயை அணைத்தனர். அதற்குள் மோட்டார் சைக்கிள் தீபிடித்து முழுவதும் எரிந்துவிட்டது. 
 

இதுகுறித்து ரத்தனபுரி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முன் விரோதத்தில் பைக்குக்கு தீ வைத்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe