கோவையில் இளைஞர் கொலை- கல்யாண வீடு துக்க வீடாக மாறியது...

published 5 months ago

கோவையில் இளைஞர் கொலை- கல்யாண வீடு துக்க வீடாக மாறியது...

கோவை: கோவை, கெம்பட்டி காலணி பகுதியை சேர்ந்தவர் கோகுல்(24). இன்று தனது அண்ணன் ரங்கராஜ் திருமணம் நடைபெறுவதால். நேற்று இரவு கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி, கஞ்சா புகைத்து போதையில் அசோக் நகர் பாலாஜிஅவன்யூ  பகுதியில் வந்து கொண்டு இருந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த சில இளைஞர்கள் ஏற்கனவே இருந்தகோஅ முன் விரோதம் காரணமாக கோகுலிடம் தகறாரில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

 

இதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கோகுலை குத்தி விட்டு தப்பி உள்ளனர். இதில் இரத்தம் சொட்ட, சொட்ட கோகுல் சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

அண்ணன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமண வீடு துக்க வீடாக மாறி உள்ள சமவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe