பட்டாசு வெடித்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு…

published 1 week ago

பட்டாசு வெடித்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு…

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை மாநரில் இந்து அமைப்புகள் சார்பில் 700 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 

இந்நிலையில், இந்து முன்னணி சார்பில் சின்னியம்பாளையம் அரச மர விநாயகர் கோயில் அருகே சிலை வைக்க விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து சதுர்த்தி விழா விதிமுறைகளை மீறியதாக பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe