கோவை சிறையில் கொலை வழக்கு கைதி சாவு…

published 5 months ago

கோவை சிறையில் கொலை வழக்கு கைதி சாவு…

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் குள்ளான்(57). இவர் கடந்த 2009ம் ஆண்டு கோத்தகிரியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், சிறையில் இருந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை சிறை வார்டன் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe