கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்?- தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டை…

published 5 months ago

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்?- தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டை…

கோவை: கோவை நல்லாம்பாளையம் சங்கனூர் பகுதியில் திறந்தவெளிக் கிணறு ஒன்று உள்ளது. 
பாதியளவு தண்ணீர் உள்ள இந்த கிணற்றில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக கவுண்டம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி இறங்கி அந்த வாலிபரை தேட முயன்றனர். ஆனால் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அவர் கிடைக்கவில்லை. 
சிறிது நேரத்தில் இருட்டி விட்டதால் மின் விளக்கு அமைத்து தேடி பார்த்தனர். இருப்பினும் முயற்சி தோல்வியிலேயே முடிந்ததால் திரும்பி சென்றனர்.

கிணற்று அருகில் அந்த வாலிபர் பணத்தை வைத்து விட்டு குதித்து விட்டதாக தெரிகிறது. எனவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் யாராவது காணாமல் போயுள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe