தொண்டாமுத்தூர் அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

published 5 months ago

தொண்டாமுத்தூர் அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுயானைகள் இப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படும் நிகழ்வுகளும் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

நிலையில் கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியை சேர்ந்த பேகன் என்பவர் இன்று அதிகாலை காலைக்கடன் கழிக்க சென்ற பொழுது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையும் வனத்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக கூறி அவரது உறவினர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe