பளீஸ் மா... என் வேலை போயிடும்... தேர்வெழுத வந்த மாணவியிடம் கெஞ்சிய காவலர்!

published 4 days ago

பளீஸ் மா... என் வேலை போயிடும்... தேர்வெழுத வந்த மாணவியிடம் கெஞ்சிய காவலர்!

கோவை: கோவையில் குரூப் 2 தேர்வு எழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சி, அவரை திருப்பி அனுப்பினார் தேர்வு மையத்தில் பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர்.

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை எழுத 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 113 மையங்களில் 33,490 பேர் எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குத் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும், காலை 9 மணிக்குப் பிறகு வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மணிக்கூண்டு, தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்திற்கு மாணவி ஒருவர் 2 நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என்றனர்.

தாமதத்திற்கு மன்னித்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவி மன்றாடினார். வேறு வழியே தெரியாத அங்கிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், உங்களை அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் என் வேலையே போய்விடும் என்று கெஞ்சினார்.

போலீஸ்காரரின் நிலைமைய உணர்ந்த மாணவி சோகத்துடன் திரும்பிச் சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe