வீட்டை விற்று தருவதாக கூறி அடமானத்திற்கு விட்டு 10 லட்சம் மோசடி...

published 5 months ago

வீட்டை விற்று தருவதாக கூறி அடமானத்திற்கு விட்டு 10 லட்சம் மோசடி...

கோவை: கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் என்பவரின் மகன் அருண் (35). இவர் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். 

இவருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ளது . பணப் பிரச்சனை இருந்து வந்ததால் அருண் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஜெகநாத் சிங் என்பவரை  அணுகி உள்ளார். அப்போது அவர் வீட்டை சுத்தம் செய்து பின்னர் விற்றால் நல்ல விலைக்கு போகும் என கூறி உள்ளார். 

இதற்காக 30 ஆயிரம் ரூபாயை அருணிடம் இருந்து அவர் வாங்கி உள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் அவர்கள் வீட்டை விற்பதற்கு எந்த விதமான ஏற்பாட்டையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அருண் தனது வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளார். அப்போது பிரவீன் என்பவர் அந்த வீட்டில் குடியிருந்து வருவது தெரியவந்தது. 

அவரிடம் விசாரித்த போது ஜெகநாத் சிங் அந்த வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு போக்கியத்திற்கு  விட்டு உள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து அருண் ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் ஜெகநாத் சிங், பிரவீன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe