கேரள மண்ணில் கோவை மாணவி அசத்தல்..!

published 4 months ago

கேரள மண்ணில் கோவை மாணவி அசத்தல்..!

கோவை: சைக்கிளிங் போட்டியில் கேரள மாநிலத்தில் பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளார் கோவை மாணவி.


கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக "கேலோ இந் தியா" பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யா வட்டத்தில் கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு - கேரளா - பாண்டிச் சேரி -  கர்நாடகா - ஆந்திரா - தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.சப் ஜூனியர்.

வுமென ஜூனியர், வுமென எலைட் உள்ளிட்ட பிரி வுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் சார்பாக கோவை பள்ளி  மாணவி ஹாஷினி கலந்து கொண்டு கெரின், ஸ்பி ரின்ட ஆகிய பிரிவில் தலா ஒரு தங்கமும், டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவில் தலா ஒரு வெள்ளியும் என மொத்தம் பதக்கங்களை வென்றனர்

இது குறித்து ஹாஷினி கூறுகையில்: ஆறுவருடமாக சைக்கிள் பயிற்சி பெற்று  தொடர் பல்வேறு போட்டிகளில் பதக்கம்  பெற்று  வந்து உள்ளேன். அடுத்த வரும் ஒலிம்பிக்  போட்டிக்காக சிறப்பு பயிற்சி பெற்று வருகிறேன். 

தற்போது நடை பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்து டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஜனவரியில் நடைபெறும் தேசிய அளவினாளன போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்வேன். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe