கோவையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை!

published 4 months ago

கோவையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை: கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் சோதனை.

கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்று காலை மாநகரில் பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், கோவைப்புதூர், ஈச்சனாரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கியுள்ள பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் அறைகளில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரி அருகே இதேபோன்று நடத்தப்பட்ட சோதனையில், மாணவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe