கோவையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி வருகை...

published 4 months ago

கோவையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி வருகை...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அஜய் பட்நாக்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe