கோவையில் மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

published 4 months ago

கோவையில் மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

கோவை: கோவையில் மீன் பிடிக்க சென்ற சிறுவன், டிரைவர் ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்.

கோவை மதுக்கரை மார்க்கெட் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாரிஸ் அகமத்(24). டிரைவர். இவரது அக்காள் மகன் ஹயான் அஹமத்(8). 2ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் குனியமுத்தூர் செங்குளத்துக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன உறவினர்கள் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை.

இந்நிலையில் நேற்று செங்குளம் அருகே ஒரு பைக், செருப்பு உள்ளிட்ட உடைமைகள் கிடந்தன. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து குளத்தில் தேடி பார்த்தபோது, பாரிஸ் அகமத் மற்றும் ஹயான் அஹமத் குளத்தில் மூழ்கி பலியானது தெரியவந்தது. பின்னர் இருவரின் சடலத்தையும் மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் இருவரின் சடலத்தையும் பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருவரும் மீன் பிடிக்க முயன்றபோது குளத்தில் தவறி விழுந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe