அன்னூரில் மரத்தில் பிணமாக தொங்கிய அடையாளம் தெரியாத முதியவர்

published 2 years ago

அன்னூரில் மரத்தில் பிணமாக தொங்கிய அடையாளம் தெரியாத முதியவர்

கோவை: கோவை அன்னூர் கிராம் நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வருபவர் அறிவுடைநம்பி (வயது 45). இவருக்கு அளிக்குளம் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இதுகுறித்து அன்னூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மரத்தில் பிணமாகத் தொங்கிய 55 வயது மதிக்கதக்க ஆணின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் ஒருவர் மரத்தில் பிணமாகத் தொங்குவது ஊர் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe