கோவையில் பாஜகவினர் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி, கருப்புபலூன் ஆர்ப்பாட்டம்...

published 1 week ago

கோவையில் பாஜகவினர் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி, கருப்புபலூன் ஆர்ப்பாட்டம்...

கோவை: திமுக அரசை கண்டித்தும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தை கண்டித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா,கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்தாத தமிழக முதல்வரை கண்டித்தும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் ராம்நகரில் உள்ள கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் இல்லத்திலும் கோவை மாவடத்தில் உள்ள அனைத்து பாஜக நிர்வாகிகள் வீட்டு முன்பாக திமுக அரசை கண்டித்து கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்தை கண்டித்து எந்தவிதமான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும் இதனால் டெல்டா மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அதே போன்று முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது என்றும், 

கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை என்றும் கேரளாவில் இருந்து கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி வருகிறார்கள் அதற்கும் முதல்வர் செவி சாய்க்கவில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe