ஆன்லைன் முதலீடு மோசடி- கோவையில் பெண்ணிடம் ஏமாற்றிய கோவா நபர் கைது...

published 3 days ago

ஆன்லைன் முதலீடு மோசடி- கோவையில் பெண்ணிடம் ஏமாற்றிய கோவா நபர் கைது...

கோவை: கோவை,
சிங்காநல்லூரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 8,65,000 ரூபாய் முதலீடு செய்து உள்ளார். பின்னர் பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போது, பணம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் பணம் செலுத்தினால் பணம் கிடைக்கும் என்றும் கூறி மோசடி செய்து உள்ளனர். 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கோவா மாநிலம் பனாஜியை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
 

ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe