கோவையில் மத நல்லிணக்க ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்...

published 1 day ago

கோவையில் மத நல்லிணக்க ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்...

கோவை: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையில் கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகையில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் சென்று கோவில் நிர்வாகிகளுக்கு இணைப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்ந்தனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை என்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் ரம்ஜான் தொழுகையை முடித்து மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சென்று  கோவில் நிர்வாகிகள், அய்யனார் ஆதீனம் ஆகியோர்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினர். மேலும் கோவிலில் இருந்த பக்தர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

அதே போல் கோவில் நிர்வாகிகளும் அய்யனார் ஆதீனம் ஆகியோர்களும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கட்டி அணைத்து  இந்து கடவுள்களின் படங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe