மதபோதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் மேலும் ஒருவர் கைது- சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

published 3 weeks ago

மதபோதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் மேலும் ஒருவர் கைது- சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

கோவை: கோவையில் போக்சோவில் கைதான ஜான் ஜெபராஜ் வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மதபோதகர். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. 

புகாரின்பேரில், காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். கடந்த சனிக்கிழமை ஜான் ஜெபராஜை மூணாறில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் வருகிற 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவரை காவலில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தியதில், அந்த சிறுமிகளுக்கு மேலும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் தெரியவந்தது.

அந்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கையில், துடியலூரை சேர்ந்த பென்னட் ஹரீஸ்(32) என்பவரும் அந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் பென்னட் ஹரீசை நேற்று கைது செய்தனர். 

இவருக்கும், மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த போக்சோ வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe