கோவையில் சிகிச்சை பெற்று திரும்பிய ஓ.பி.எஸ்- அதிமுக பாஜக கூட்டணி குறித்தான கேள்விக்கு அவர் அளித்த பதில்…

published 1 day ago

கோவையில் சிகிச்சை பெற்று திரும்பிய ஓ.பி.எஸ்- அதிமுக பாஜக கூட்டணி குறித்தான கேள்விக்கு அவர் அளித்த பதில்…

கோவை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார்.  

சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று அவர் தேனி புறப்பட்டார். அவரை கட்சியினர் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிகிச்சை முடிந்து வெளியில் வரும் பொழுது செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் அந்தக் கூட்டணி வெற்றி பெறுமா? என்றும் கேள்வி எழுப்பினர், அதற்கு "இன்று விடுமுறை, வந்திருந்த அனைவருக்கும் நன்றி புனித வெள்ளி வாழ்த்துக்கள்"  என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe