பீளமேட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு- ரவுடி என மிரட்டிய வாலிபர் கைது….

published 1 day ago

பீளமேட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு- ரவுடி என மிரட்டிய வாலிபர் கைது….

கோவை: கோவையில் நடந்து சென்ற ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரவுடி என கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை காளப்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் அஜய் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டார். 

அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் ரவுடி என்றும், போலீஸ் நிலையங்களில் தன் மீது வழக்குகள் உள்ளதாகவும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1000 பறித்தார்.

தொடர்ந்து அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயற்சி செய்தார். அதிர்ச்சி அடைந்த அஜய் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வாலிபர் பொதுமக்களிடமும் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச்சென்றார். 

இது குறித்து அஜய் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரவுடி என கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது சின்னியம்பாளையத்தை சேர்ந்த சஞ்சய் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe