துடியலூர் அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

published 2 years ago

துடியலூர் அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோவை: கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முப்புடாதி (வயது 64), முன்னாள் தனியார் வங்கி மேலாளர். சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டி விட்டு  குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

வீடு திரும்பிய முப்புடாதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து முப்புடாதி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில்  பதிவாகியிருந்த கொள்ளையர்களின் உருவத்தை வைத்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்ற திருடர்களைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe