கோவை மாவட்டத்தில் 8 காவல்துறையினருக்கு அண்ணா விருது

published 2 years ago

கோவை மாவட்டத்தில் 8 காவல்துறையினருக்கு அண்ணா விருது

கோவை: தமிழகக் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு துணை-ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல வழக்குகளில் துரிதமாகச் செய்யப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வெகுமதிகளைப் பெற்றுள்ளார். இதே போன்று கோவை ஆயுதப்படை ஆய்வாளர் பிரதாப் சிங், உக்கடம் காவல்துறை நிலைய சிறப்புத் துணை- ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஆட்சேர்ப்புப் பள்ளித் துணை-ஆய்வாளர் பிரபு மற்றும் துணை- ஆய்வாளர் பாலு, குற்றப் பிரிவு சி.ஐ.டி துணை -ஆய்வாளர் ருக்குமணி, கோவை காவல்துறை தொலை தொடர்பு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 8 காவல்துறையினர் அண்ணா விருதுக்குத் தேர்வாகியுள்ளது பாரட்டுக்குரியது.

இவர்களுக்கு அண்ணா பதக்கமும், ரூ.10 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி அண்ணா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள்,  பல்வேறு அரசுத் துறையினர், மற்றும் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe