கோவையில் போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது: 1304 போதை மாத்திரைகள் பறிமுதல்

published 2 years ago

கோவையில் போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது: 1304 போதை மாத்திரைகள் பறிமுதல்

 

கோவை: கோவை ரத்தினபுரி டாடாபாத் 9-வது வீதியிலுள்ள பள்ளி அருகே சிலர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ரத்தினபுரி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் காவல்துறையைப் பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறை விசாரித்த போது அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீளமேடு காலப்பட்டி ரோட்டிலுள்ள ஒரு மருந்துக் கடையில் போதை மாத்திரைகளை வாங்கி அதனைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்குப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து  காவல்துறையினர் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (வயது 18) மற்றும் 16 வயது சிறுவன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் தனபாலன் (19), மருந்துக் கடையில் போதை மாத்திரைகளைப் பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த மருந்துக் கடை உரிமையாளர் கரிகாலன் (49) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1304 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு  மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe