குளியல் அறையில் ஷாக் அடித்து தாய் மகள் பரிதாப பலி

published 2 years ago

குளியல் அறையில் ஷாக் அடித்து தாய் மகள் பரிதாப பலி

 

கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர். டி. ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

வீட்டில் அவரது மனைவி ( வயது 52) கார்த்திகா மற்றும் மகள் அர்ச்சனா (வயது 18) ஆகியோர் உள்ளனர். அர்ச்சனா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு முன் குளிப்பதற்காகக் குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட திடீர் மின்சார கசிவு பக்கத்திலிருந்த தண்ணீரில் பட, அதன் மூலம் எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது.

எலக்ட்ரிக் ஷாக் அடித்து அர்ச்சனா சத்தம் போடச் சமையலறையிலிருந்த அவரது அம்மா கார்த்திகா தனது மகளைக் காப்பாற்ற உள்ளே சென்ற போது அவருக்கும் எலக்ட்ரிக் ஷாக் அடித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

9 மணி அளவில் அர்ச்சனாவை அழைத்துச் செல்லும் கால் டாக்ஸிகாரர் வந்துள்ளார். அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் அவர்கள் போன் எடுக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது குளியலறையில் அவர்கள் இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்தவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர் இறந்த  இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாய் மற்றும் மகள் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe