கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு

published 2 years ago

கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு

 

கோவை: கோவையிலிருந்து மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023-ஆம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை- ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாகச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02197) அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் மாலை 3.25 மணிக்குக் கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இதேபோல, அக்டோபர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை ஜபல்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்குக் கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, பாலக்காடு, ஷோரனூா், மங்களூரு, இட்டாரசி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe