கோவையில் போக்குவரத்து மாற்றம் : சௌரிபாளையம் பஸ் பீளமேடு வழியா வராதுங்கோ..!!

published 2 years ago

கோவையில் போக்குவரத்து மாற்றம் : சௌரிபாளையம் பஸ் பீளமேடு வழியா வராதுங்கோ..!!

கோவை: கோவையில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

கோவை மாநகரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பாலப்பணிக்காக, பீளமேடு சந்திப்பில் இரண்டு தூண்கள் (P172, P173) அமைக்க வேண்டியுள்ளது.

அதற்கான அடித்தளம் அமைக்கும் பணி தொடங்க வேண்டியுள்ளதால்,

காந்திபுரத்தில் இருந்து பீளமேடு சந்திப்பு வழியாக சௌரிபாளையம் செல்லும் பேருந்து எண் (95) வழித்தடத்தை, தற்காலிகமாக 15 நாட்கள் மட்டும், லட்சுமி மில்லில் இருந்து, புலியகுளம் வழியாக சௌரிபாளையம் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe