கோவையில் வடமாநில தொழிலாளியை தாக்கிய கும்பல்

published 2 years ago

கோவையில் வடமாநில தொழிலாளியை தாக்கிய கும்பல்

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசிகுல் அல் இஸ்லாம் (20). இவர் கோவை பீளமேட்டில் தங்கி அங்குள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவர் தனது சொந்த ஊரை சேர்ந்த நண்பர்களை சந்திப்பதற்காக உக்கடம் லங்கா கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து உனது செல்போனை கொடு, பேசி விட்டு தருகிறோம் என கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த அசிகுல் அல் இஸ்லாமை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக உக்கடம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, வாலிபரை தாக்கிய பணம் பறித்த 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe