பையைத் தூக்க உதவ வந்த போலீசார், பதறிய இளம்பெண்: மதுரையிலிருந்து கடத்தி வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல்

published 2 years ago

பையைத் தூக்க உதவ வந்த போலீசார், பதறிய இளம்பெண்: மதுரையிலிருந்து கடத்தி வந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல்

நீலாம்பூர்: கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் தூக்க முடியாத அளவில் கட்ட பைகளை எடுத்துக்கொண்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த தனிப்படை போலீசார் பரிதாபப்பட்டு அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்யச் சென்றனர். அந்த இளம்பெண் தனக்கு உதவி வேண்டாம் என பதரியதோடு  முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த இளம்பெண்ணிடம் அவர் வைத்திருந்த பைகளைக் காண்பிக்கும்படி கூறினர். ஆனால் அவர் அதற்கு மறுத்தார்.

அப்போது போலீசார் அவரிடமிருந்து பைகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் பண்டில்-பண்டிலாக கஞ்சா இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெய பாண்டியம்மாள் (வயது 30) என்பதும், இவர் தேனி, உசிலம்பட்டி பகுதிகளிலிருந்து மொத்தமாகக் கஞ்சாவை வாங்கி வந்து இங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய பாண்டியம்மாளிடம் இருந்த 50 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe