நகை பணம் திருடிய வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

published 2 years ago

நகை பணம் திருடிய வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

கோவை: கோவையில் வீட்டு வேலை பார்த்த இடத்தில் நகை பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ காந்த், மனைவி ஸ்ரீதேவி(42). சொந்த தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் இருகூரைச் சேர்ந்த சாந்தி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இவர் தினமும் காலையில் வீட்டுக்கு வந்த மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதேபோல் அவர் சம்பவத்தன்றும் வேலைக்கு வந்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். 
அப்போது வீட்டுப் பீரோ திறந்து கிடப்பதை ஸ்ரீதேவி பார்த்தார். மேலும் பீரோவிலிருந்த 3 1/2 பவுன் தங்க வளையல், ரூ. 25 ஆயிரம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகத்தின் பேரில், ஸ்ரீதேவி வீட்டில் வேலை பார்த்த சாந்தியிடம் விசாரித்தார். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார்.

இது குறித்து ஸ்ரீதேவி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நகை மற்றும் பணத்தைச் சாந்தி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறை அவரை கைது செய்து 3 1/2 பவுன் தங்கம், ரூ. 25 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

இதையும் பார்க்கலாமே.. கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே...

https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe