ராம் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழா: விளக்கு பூஜை செய்து வழிபாடு

published 2 years ago

ராம் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழா: விளக்கு பூஜை செய்து வழிபாடு

கோவை: ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை ஏற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கோவை ராம் நகர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 63 வருடப் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் 40ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா கோவிலின் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில், வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

 நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மேலும் அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்ம வாகனப் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு, அபிஷேக பூஜை உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe