பள்ளிச் சிறுவர்களிடம் சில்மிஷம்: செட்டிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் போக்சோவில் கைது

published 2 years ago

பள்ளிச் சிறுவர்களிடம் சில்மிஷம்: செட்டிபாளையத்தைச் சேர்ந்த முதியவர் போக்சோவில் கைது

கோவை: செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 63). இவரது வீட்டின் அருகே 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த அவர் அந்த சிறுவனிடம் மிட்டாய் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று, அந்த  சிறுவனுக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் அழுது கொண்டே அங்கிருந்து ஓட்டம் பிடித்து வீட்டிற்குச் சென்றான்.
சிறுவன் அழுது கொண்டு வருவதைப் பார்த்த சிறுவனின் பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். அப்போது குப்புசாமி  பாலியல் தொல்லை கொடுத்ததை அவன் தெரிவித்தான்.
இதைக்கேட்டு அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவலர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
சம்பவம் தொடர்பாகக்  கட்டுப்பாட்டு அறை  காவல்துறையினர் செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குப்புசாமியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குப்புசாமி  ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 8 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லையளித்ததும், மீண்டும் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவனை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குப்புசாமியைக் கைது செய்தனர். அவரால் மேலும் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe