வேலை கிடைக்காத சோகத்தில் கோவை வாலிபர் தற்கொலை

published 2 years ago

வேலை கிடைக்காத சோகத்தில் கோவை வாலிபர் தற்கொலை

கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரைபூலுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்பவரின் மகன் பிரகாஷ் (26). இவருக்குச் சரியான வேலை கிடைக்காமலிருந்து வந்தார். இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக பிரகாஷ் மனமுடைந்த நிலையிலிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய பூச்சி மருந்தைக் குடித்து பிரகாஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது குடும்பத்தார் பிரகாஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரகாஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe