கோவையில் ஓட்டை பிரித்து வீட்டில் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி..!

published 2 years ago

கோவையில் ஓட்டை பிரித்து வீட்டில் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி..!

கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவருக்குத் திருமணமாகி கணவர், ஒரு பெண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று இரவு இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்துத் தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் தர்ம ராஜ் (வயது 22) என்ற வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார்.

பின்னர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். இதனையடுத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தர்ம ராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழிக்குப்பதிவு செய்து நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்ம ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe