குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புக்காக பைக் பயணம்

published 2 years ago

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்புக்காக பைக் பயணம்

கோவை: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை முதல் கோவா வரை இருசக்கர வாகன பயணத்தை ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டியினர் முன்னெடுத்துள்ளர்.

கோவை மாவட்ட ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டி சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், உலக குழந்தைகள் வாரத்தை முன்னிட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை முதல் கோவா வரை செல்லும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் 25 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்கின்றன. இந்த பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இதில் பங்கு பெறுவோர்க்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இவ்விழாவில் ரோட்டேரியன் ராஜ்மோகன் நாயர், ரோட்டரியல் இண்டஸ்ட்ரி சிட்டி நிறுவன தலைவர் பிரபு சங்கர், கிளப் நிர்வாகிகளான கனகராஜ், சஃபி உல்லா, உமா பிரபு, சண்முகானந்தம், பிரேம் செந்தில்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe