இளம்பெண் நிர்வாண நிலையில் தூக்கிட்டு தற்கொலை

published 2 years ago

இளம்பெண் நிர்வாண நிலையில் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்த இளம் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் கோவை 100அடி ரோடு பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிசனாக பணிபுரிந்து வந்தார். இவர் ரத்தினபுரி பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது அறை கதவு மூடி இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்தனர். அப்போது 24வயது அந்த பெண் மின் விசிரியில் ஆடைகள் இன்றி நிர்ணவ நிலையில் தொங்கிபடி இருந்தார். போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe